வரலாறு
ஆறாம் வகுப்பு முதல் பருவம்
அலகு 1 - வரலாறு என்றால் என்ன .?
- வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு
- வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான 'இஸ்டோரியா' என்பதிலிருந்து பெறப்பட்டது .இதன் பொருள் "விசாரிப்பதன் மூலம் கற்றல் "
- இந்தியாவின் அகழாய்வு செய்யப்பட்ட சில முக்கிய இடங்கள்
- பழையகற்கலாம் :
- பிம்பேட்கா
- ஹன்சாகி பள்ளத்தாக்கு
- அத்திரம் பாக்கம் (தமிழ்நாடு)
- புதிய கற்காலம்
- பூர்ஜஹோம்
- கோல்டிவா
- மாகரா
- சிரண்ட்
- மெஹர்கர்
- பிரம்மகிரி
- பையம்பள்ளி
- வெண்கலக்காலம்
- லோத்தல் (குஜராத்)
- இரும்பு காலம்
- ஹல்லூர்
- ஆதிச்சநல்லூர்
- நாணயவியல் - நாணயம், அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை.
- பழங்கால மக்கள் வேட்டையாடியதை மலைப்பாறைகளிலும் குகைகளிலும் வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்களிலிருந்து அறிய முடிகிறது.
- பாறை ஓவியங்கள்: வேட்டைக்கு போனவர்கள் அங்கு நடந்தது என்ன என்பதை, தங்களோடு வர இயலாதவர்களுக்கு காட்டுவதற்காக தீட்டியிருக்கலாம்.
- வரலாற்றுக்கு முந்தையகாலம்: கற்கருவிகளைப் பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம்.
- வரலாற்றுத் தரவுகளைத் தொல்லியல் அடையாளங்களான கற்கருவிகள், புதைப்படிவங்கள், பாறை ஓவியங்கள் போன்றவற்றில் இருந்து பெறுகிறோம்.
- வேட்டையாடுதல்: பழங்கால மனிதர்களின் தொழில்
- வரலாற்றின் ஆதாரங்கள்:
- தொல்பொருள் சான்றுகள்:
- நாணயங்கள்
- கல்வெட்டுகள்
- பாறை கல்வெட்டுகள்
- கோயில் சுவர் கல்வெட்டுகள்
- உலோக தூண்
- செப்பேடுகள்
- தொல் கைத்திறன் பொருட்கள்
- பானைகள்
- பொம்மைகள்
- கருவிகள்
- அணிகலன்கள்
- நினைவுச்சின்னங்கள்
- அரண்மனைகள் (திருமலை நாயக்கர் மகால்)
- கோட்டை (வேலூர்)
- கோயில்கள் (தஞ்சாவூர்)
- ஸ்தூபி (சாஞ்சி)
- மடங்கள் (டபாங்)
- இலக்கியச்சான்றுகள்
- மதசார்பற்ற இலக்கியம்
- காப்பியங்கள் & பாடல்கள் (சாகுந்தலம்)
- வெளிநாட்டுப் பயண குறிப்புகள்
- இந்திய ஆசிரியர்களின் நூல்கள்
- நாட்டுப்புற கதை பாடல்கள்
- மதச்சார்புள்ள இலக்கியம்
- இதிகாசங்கள்
- இராமாயணம்
- மகாபாரதம்
- பக்தி இலக்கியங்கள்
- தேவாரம்
- நாலாயிரத் திவ்யபிரபந்தம்
- திருவாசகம்
- கல்வெட்டியல் - கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை.
- பேரரசர் அசோகர் :
- அசோகரின் ஆட்சியில் புத்தமதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
- கலிங்க போருக்கு பின் அசோகர் போர் தொடுப்பதைக் கைவிட்டார்.
- இப்போருக்கு பின் புத்த மதத்தை தழுவி அமைதி, அறத்தைப் பரப்ப தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.
- இவர் பொது மக்களுக்கு ஆற்றிய சேவை முன் மாதிரியாக விளங்கியது.
- வெற்றிக்கு பின் போரைத் துறந்த முதல் அரசர்.
- உலகிலேயே முதன் முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்து தந்தவர்.
- இன்றும் அவர் உருவாக்கிய சாலைகள் பயன்படுத்தபட்டு வருகின்றன.
- தேசிய கொடியில் உள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகர் நிறுவிய சாரநாத் கற்றூணில் உள்ள முத்திரையிலிருந்து பெறப்பட்டது.
- வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்ஸ்சாண்டர் கன்னிங்காம் போன்றவர்களின் வரலாற்று ஆய்வுகள் மூலம் அசோகரின் சிறப்புகள் உலகிற்கு கொண்டுவரப்பட்டன.
- அசோகரின் வரலாற்று ஆவணங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டவர் - சார்லஸ் ஆலன்
- நூலின் பெயர் 'The Search for the India's Lost Emperor'. (2012)
- அசோகரின் ஆட்சியில் புத்த மதம் நாடு முழுவதும் பரவியது
- பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை - வேட்டையாடுதல்.
- பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் - குகைகள்.
- பழைய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.
- வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ்.
Tags:
TNPSC